முன்னுரை
தமிழின் முதற்காப்பியம் சிலப்பதிகாரம். இந்நூலை இயற்றியவர் இளங்கோஅடிகள் ஆவார். இந்நூல், புகார் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என மூன்று காண்டங்களையும், மங்கல வாழ்த்துக் காதை முதலாக, வரந்தரு காதை ஈரக 30 காதைகளைக் கொண்டது. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்ராவதும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் எனும் மூன்று உண்மைகளை மையமாகக் கொண்டது. இதில் மதுரைக் காண்டத்தில் வழக்கரை காதையில் இடம் பெறும் நீதி கேட்க வந்த, கண்ணகியின் கேள்வியும் மன்னனின் நிலைமையும் பற்றிக் காண்போம்.
வழக்குரை காதை
கண்ணகி தன் கணவன் கள்வன் அல்ல என்பதை மன்னனுக்கும், உலகுக்கும் உணர்த்த எண்ணி மன்னனிடம் சென்று முறையிட்டதைக் வழக்குரை காதை கூறுகிறது.
கண்ணகியின் வருகை
கோவலன் கொலை செய்யப் பட்டுவிட்டான் என்பதை அறிந்த காண்ணகி, இணை அரி சிலம்பு ஒன்றை கையில் ஏந்தியவாறு பாண்டிய மன்னனின் அரண்மனை வாயிலை அடைந்தாள்.
கண்ணகி வாயிற் காவலனிடம் கூறியது
கண்ணகி அக்காவலனை நோக்கி "வாயில் காவலனே! வாயின் காவலனே!அறிவு அற்றுப் போன, புலனடக்கம் இல்லாத, அரச நீதியை தவறிய மன்னனின் வாயில் காவலனே! பரல்களை உடைய இணைச் சிலம்புகளுள் ஒரு சிலம்பை கையில் ஏந்தியவாறு, கணவனை இழந்த பெண் ஒருத்தி அரண்மனை வாசலின் முன் வந்துள்ளாள் என்பதை மன்னரிடம் சென்று கூறுவாயாக"எனக் கூறினாள்.
காவலன் மன்னனிடம் சென்று கூறுதல்
வாயிற்காலன் கண்ணகியின் தோற்றம் கண்டு பயந்து,மன்னனிடம் சென்று மன்னனை வாழ்த்தி எம் கொற்கை நாட்டு மன்னனே வாழ்க! தெற்கிலுள்ள பொதிகை மலைக்குத் தலைவனே வாழ்க! செழியனே வாழ்க! தென்னனே வாழ்க ! பழி தரும் வழில் நடவாத பஞ்சவனே வாழ்க! என மன்னனைப் புகழ்ந்து வாழ்த்தினான். " பின்னர் கண்ணகியின் தோற்றம் பற்றி மன்னனிடம் பின் வருமாறு கூறினான்.
"இரத்தம் பீறிட்டு எழும் மகிடா சுரனுடைய பிடர்த்தலை பீடத்தின் மேல் நின்ற கொற்றவை என்றால் அவளும் அல்ல. சப்த மாதர் ஏழு பேருள் இளையவளான பிடாரியோ என்றால் அவளும் அல்ல. இறைவனை நடனம் ஆடச்செய்த பத்திரகாளியோ என்றால் அவளும் அல்ல.. பாலை நிலக் கடவுளாகிய கொற்றவையோ என்றால் அவளும் அல்ல. தாருகன் என்ற அசுரனின் மார்பைப் பிளந்த துர்க்கையோ என்றால் அவளும் அல்ல.. உள்ளத்தில் மிகுந்த கோபம் உடையவளாக காணப்படுகிறாள். கணவனை இழந்த நிலையில் கையில் சிலம்பு ஒன்று ஏந்தி அரண்மனை வாசலில் வந்து நிற்கிறாள்" என கண்ணகியின் நிலையினைக் கூறினான்.
பாண்டிய மன்னனின் கேள்வியும் கண்ணகியின் பதிலும்
வாயிற்காவலன் கூறியதைக் கேட்ட மன்னன், அவளை அழைத்து வரும்படி கூறினார். வாயில் காவலன், கண்ணகியிடம் சென்று மன்னன் அழைக்கும் செய்தி கூறி அவளை உள்ளே அழைத்து வந்தான். கண்களில் நீர் வழிய நின்ற கண்ணகியை பார்த்த மன்னன்,
"நீர்வார்க் கண்ணை எம்முன் வந்தோய்
யாரையோ நீ மடக்கொடி யோய்"
என கண்ணகியைப் பார்த்து கேட்டார்.
அதற்குக் கண்ணகி,"ஆராயாமல் செயல்படும் மன்னனே நீ கேட்பாயாக! வானில் உள்ள தேவர்களும் மகிழும்படி, ஒரு புறாவுக்காக தன் தசையை அரிந்து கொடுத்த சிபிச் சக்கரவர்த்தியும், பசுவின் துன்பத்தைப் போக்க தன் ஒரே மகனை தேர்க்காலில் கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்த புகழுடைய புகார் நகரமே என்னுடைய ஊராகும். அப்படிப்பட்ட புகழுடைய ஊரில் மிகுந்த சிறப்புடன் விளங்கும், பெருங்குடியில் மாசாத்துவான் என்ற வணிகன் மகனாகப் பிறந்து, வாழ்வதற்கு வேண்டி, முற்பிறவியின் வினை துரத்த, என் கால் சிலம்பை விற்க உன் மதுரை மாநகருக்குள் வந்து உன்னால் கொலை செய்யப்பட்ட கோவலனின் மனைவி நான், என்னுடைய பெயர் கண்ணகி என்பதாகும். எனக் கூறினாள்.
பாண்டிய மன்னனின் மறுமொழி
தெய்வப் பெண் போல் காட்சி அளிப்பவரே "கள்வனைக் கோறல் கொடுங்கோலன்று இதுவே அரசு நீதியாகும்” என மன்னன் கண்ணகியைப் பார்த்து கூறினார்.
கண்ணகிக்கு கிடைத்தது வெற்றி
மன்னனின் மொழி கேட்ட கண்ணகி ஆத்திரம் கொண்டு மன்னனைப் பார்த்து, "நல்ல நெறியில் செல்லாத கொற்கை மன்னனே! என் கால் சிலம்பு மாணிக்கப் பரல்கள் உடையது”, என்றாள், இது கெட்ட மன்னவன். "நீ நல்லதை கூறினாய் என் தேவியின் காலில் உள்ள சிலம்பு முத்துப் பரல்களை உடையது”. என்று கூறினான், மேலும் கோவலனிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிலம்பினை கண்ணகி முன் கொண்டு வந்து வைக்க ஆணையிட்டான். உடனே கண்ணகி விரைந்து அந்த சிலம்பினை கையில் எடுத்து உடைத்தாள். உடைத்து அதிலிருந்து மாணிக்கப் பரல்கள் சிதறி கீழே விழுந்தது, ஒரு பரல் மன்னனின் நெற்றியில் பட்டு தெரித்தது.
பாண்டிய மன்னனின் நிலை
மாணிக்கப் பரல்களைக் கண்ட மன்னன், பதறினான். தான் நீதி தவறியதை உணர்ந்து, “பொற்கொல்லன் சொற்கேட்ட, யானோ அரசன்! யானே கள்வன்" எனக் கூறியதோடு அரியணையில் இருந்து விழுந்து உயிரை விட்டான்.
கோப்பெருந்தேவியின் நிலை
மன்னன் இறந்ததைக் கண்ட கோப்பெருந்தேவி நிலைகுலைந்தாள் "கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்" எனக்கூறி மன்னன் மீது விழுந்து தன் உயிரை துறந்தாள்.
முடிவுரை
கோவலன் கண்ணகியின் வாழ்க்கை வரலாறு மூலம் "ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும், என்பதும், அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்” என்ற நீதி கருத்துக்கள் புறப்படுவதாக காணப்படுகிறது.
********* இராஜாலி ********
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக