எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 10 ஜனவரி, 2025

அபிராமி அந்தாதி - கலையாத கல்வியும்...

நூல் குறிப்பு 


  கி.பி 18-ஆம் நூற்றாண்டில் அபிராமி பட்டர் என்பவரால் பாடப்பட்டது அபிராமி அந்தாதி ஆகும். அந்தாதி வகையைச் சார்ந்த 100 பாடல்களைக் கொண்டதாக இந்நூல் விளங்குகிறது. திருக்கடவூர் என்னும் ஊரில் எழுந்தருளியுள்ள அபிராமி அம்மன் மீது இப்பாடல் பாடப்பட்டுள்ளது.

 கலையாத கல்வியும் குறையாத வயதும்...

      அடியவர்களுக்கு அருள் செய்யும் அபிராமியின் இயல்பினை பற்றி அபிராமி பட்டர் கூறும் போது,

"ஆதிகடவூரில் அமிர்தகடேஸ்வரராகிய அமுதீஸ்ரின் இடது பக்கத்தில் அமர்ந்திருக்கும் அபிராமி அன்னை, திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலின் தங்கை ஆவார். அந்த அபிராமியை உள்ளன்போடு வழிபடும் அன்பர்களுக்கு, என்றும் நீங்காத கல்வியும், நீண்ட ஆயுளும், நல்லோர் நட்பும், குறைவில்லாத செல்வமும், குன்றாத இளமையும், ஆரோக்கியமான உடலும், முயற்சியைக் கைவிடாத மனமும், எப்பொழுதும் அன்பு செலுத்தும் மனைவியும், அருமையான குழந்தைகளும், குறையாத புகழும், சொன்ன சொல் மாறாத பண்பும், இல்லை என்று வருபவருக்கு இல்லை என்று சொல்லாமல் அள்ளிக் கொடுக்கும் செல்வமும், துன்பமில்லாத வாழ்வும் என்றென்றும் அருளும் தன்மை கொண்டவளாகக் காணப்படுகிறாள்." என அபிராமியின் அருள் செல்வத்தைப் பற்றி அபிராமி பட்டர், அபிராமி அந்தாதியில் கூறுகின்றார்.

**** இராஜாலி ****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யுனிக்கோட் - பயன்பாடு

அறிமுகம்    ஆங்கில மொழியைத் தவிர பிறமொழிகளிலும் பலரும் பல்வேறு குறியேற்றங்களையும் எழுத்துருக்களையும் பயன்படுத்தி வந்தனர். இந்த முறையில் ஒரே ...