நூல் குறிப்பு
சிற்றிலக்கியங்களில் ஒன்று கலம்பக இலக்கியமாகும். 18 உறுப்புகளைக் கலந்து பாடுவது கலம்பக இலக்கியத்தின் சிறப்பாகும். கலம்பக இலக்கியங்களில் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் பாடிய திருவரங்கக் கலம்பகம் குறிப்பிடத்தக்கதாகும். திருவரங்கத்தில் உள்ள அரங்கநாதன் மேல் பாடப்பட்ட இந்நூலில் 100 பாடல்கள் காணப்படுகின்றன.
செல்லரித்த ஓலை செல்லுமோ?
வேடர் குலப் பெண்ணை மன்னனுக்கு மணம் பேச ஓலை கொண்டு வந்த தூதுவனைப் பார்த்து வேடன் ஒருவன் " எங்கள் வேடர் குலப் பெண்ணை மன்னனுக்காக மணம் பேச வந்த தூதுவனே! கரையானால் அரிக்கப்பட்ட ஓலை செல்லுமோ? அனைத்து வளங்களையும் அருளும் திரு அரங்கநாதன் மீது அன்பு கொண்ட எங்கள் மறவர் குல பெண்களை முன்பு பெண் கேட்டு வந்த மன்னர்களின் நிலைமை என்ன என்பதை எங்கள் வீட்டிற்கு வந்து பார்! எங்கள் வீட்டு வாசல்களின் கதவுகளாக அவர்கள் பிடித்து வந்த வெண்கொற்றக் குடைகள் காணப்படுகின்றன. நாங்கள் தினை, அரிசி போன்றவற்றை அளப்பதற்கு பயன்படுத்தும் மரக்காலும் படியும் அவர்கள் அணிந்து வந்த கிரீடங்களாகும். எங்கள் குடிசையின் மீது போடப்பட்டுள்ள கீற்றுகள் அவர்கள் வீசி வந்த சாமரங்களாகும். மேலும், எங்கள் வீட்டின் நான்கு பக்கங்களும் வேலியாக அமைவது எங்களிடம் போரிட்டு தோற்ற அம்மன்னர்கள் விட்டுச் சென்ற வில்லும் வாழும் ஆகும்". - என தூதுவனிடம் வேடன் தன் குலத்தின் வீரத்தை எடுத்துக் கூறி எங்கள் குலப் பெண்களை மன்னனுக்கு பெண் கொடுக்க மாட்டோம் என மறுத்துக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
**** இராஜாலி ****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக