எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 15 அக்டோபர், 2025

பன்னிரு திருமுறைகள் - குறிப்பு


    சைவ சமய திருப்பாடல்களின் தொகுப்பாக விளங்குவது பன்னிரு திருமுறைகள் ஆகும். பன்னிரு திருமுறைகளை தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி என்பவராவார். 27 நாயன்மார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பாக பன்னிரு திருமுறைகள் விளங்குகின்றன.

பன்னிரு திருமுறைகள் பாடல் வைப்பு முறை:

பன்னிரு திருமுறைகளில்,

  • 1,2,3 -ஆம் திருமுறைகளாக விளங்குவது, திருஞானசம்பந்தர் பாடிய சம்பந்தர் தேவாரம்.
  •  4,5,6 -ஆம் திருமுறைகளாக விளங்குவது திருநாவுக்கரசர் பாடிய தேவாரம்.
  • 7 -ஆம் திருமுறையாக திருமுறையாக சுந்தரர் பாடிய சுந்தரர் தேவாரம்.
  • 8 -ஆம் திருமுறைகளாக விளங்குவது மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம் மற்றும் திருக்கோவையார்.
  • 9-ஆம் திருமுறையாக விளங்குவது 9 நாயன்மார்கள் பாடிய பாடலின் தொகுப்பு.
  •  10 - ஆம் திருமுறையாக விளங்குவது திருமூலர் பாடிய திருமந்திரம்.

  • 11- ஆம் திருமுறையாக விளங்குவது 12 நாயன்மார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு.
  • 12- ஆம் திருமுறையாக விளங்குவது சேக்கிழார் பாடிய பெரிய புராணம்.

 இப்ப பன்னிரு திருமுறை சைவர்களின் 'தமிழ் வேதம்' என அழைக்கப்படுகிறது.

 நாயன்மார்களில் சிலர் :

 63 நாயன்மார்களில் குறிப்பிடத்தக்கவர்கள்

1. திருஞானசம்பந்தர்,

2. திருநாவுக்கரசர்,

3. சுந்தரர்,

4. மாணிக்கவாசகர்,

போன்றோர் ஆவார்கள்.


 1.திருஞானசம்பந்தர்

  • 63 நாயன்மார்களில் முதன்மையானவர்,
  • ஆளுடைய பிள்ளை என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர் சீர்காழியில் சிவபாத இருதையாருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாக பிறந்தவர்.
  • உமையவளிடம் ஞானப்பால் உண்டு பாடும் வல்லமையைப் பெற்றவர்.
  • உமையவளால் பாலை கொடுத்து ஆள் கொள்ள ப்பட்ட இவர், 220 சிவ ஆலயங்களுக்குச் சென்று பாடி உள்ளார்.
  • 'திராவிட சிசு 'என அழைக்கப்படும் இவர் பாடிய தேவாரம் முதல் மூன்று திருமுறைகளாக தொகுக்கப்பட்டுள்ளது.

2. திருநாவுக்கரசர் 

  • மருள்நீக்கியார் என்னும் இயற்பெயரைக் கொண்ட திருநாவுக்கரசர், திருவாமூரில் புகழனார் மாதினி யாருக்கு மகனாகப் பிறந்தார்.
  • சிறு வயதில் பெற்றோரை இழந்த இவர் தமக்கை திலகவதி யாரால் வளர்க்கப்பட்டார்.
  • தர்ம சேனன் என்ற பெயரில் சமண சமயத்தில் சில காலம் இருந்தார்.
  • சிவபெருமானால் சூலை நோய் கொடுத்து ஆள் கொள்ளப்பட்ட இவர் திருநாவுக்கரசர் என அழைக்கப்பட்டார்.
  • திருஞானசம்பந்தர் இவரை அப்பர் என அழைப்பார்.
  •  இவர் பாடிய பாடல்கள் 4,5,6 ஆம் திருமுறைகளாக தொகுக்கப்பட்டுள்ளது.

3. சுந்தரர்

  • நம்பியாரூரார் என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர் திருவாரூரில் சடையனார் இசைஞானி யாருக்கு மகனாகப் பிறந்தார்.
  • சிவபெருமானால் ஓலை கொடுத்து ஆட்கொள்ளப்பட்ட இவர் வன்தொண்டர், தம்பிரான் தோழர் எனவும் அழைக்கப்படுகிறார்.
  • சுந்தரர் பாடிய பாடல்கள் 7 ஆம் திருமுறைகளாக தொகுக்கப்பட்டுள்ளது.

4. மாணிக்கவாசகர்

  • திருவாத ஊரார் என அழைக்கப்படும் இவர், திருவாத ஊரில் சம்பு பாதசாரியார் மற்றும் சிவஞான வதிக்கு மகனாகப் பிறந்தவர்.
  • அழுது இறைவன் அடி அடைந்த இவர் பாடிய திருவாசகம் மற்றும் திருக்கோவையார் 8 ஆம் திருமுறையாக விளங்குகிறது.

 மேற்கண்ட இவர்களோடு காரைக்கால் அம்மையார், இசைஞானியார், மங்கையர்க்கரசி போன்ற பெண் நாயன்மார்களும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஊழின் பெருவலி யாவுள? - வள்ளுவர்

முன்னுரை இலக்கியங்கள் பழக்கவழக்கங்களையும், நம்பிக்கைகளையும் மனிதனின் பண்பாட்டையும்,பிரதிபலிக்கும் களங்களாக விளங்குகின்றன. பேரிலக்கியங்கள் அற...